மைத்துனரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற வாலிபர் கைது.

IMG 20220310 WA0017

பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹித்தேந்திரா ஜோஷி (வயது 29) இவர் கடந்த 6-ந் தேதி இரவு 9.30 மணி அளவில் பான் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் 2 ரவுண்ட் சுட்டுவிட்டு தப்பி சென்றார். இதில் ஹிதேந்திரா ஜோஷி படுகாயம் அடைந்தார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது மனைவியின் சகோதரனாகிய மும்பை கார் பகுதியை சேர்ந்த தீபக் கௌதம் (வயது 30) என்பவர் தன்னுடைய மைத்துனரான ஹித்தேந்திரா ஜோஷியை பிடிக்காமல்
ஆணவக் கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது

இதையடுத்து போலிசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் 2 துப்பாக்கி 14 தோட்டக்க காளை பறிமுதல் செய்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *