பாட்டியை உயிருடன் எரித்து கொன்ற இரண்டு பேத்திகள் கைது!

IMG 20220507 WA0004

திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் 90 வயது மூதாட்டியின் ஆக்ரோஷமான நடத்தையால் எரிச்சல் அடைந்த இரண்டு பெண்கள், பாட்டியை கவனித்துக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் அவரை உயிருடன் எரித்து கொன்றதாகக் கூறப்படும் இரண்டு சகோதரிகள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பழைய பேட்டையில் உள்ள ஒரு மைதானத்தில் இருந்து எரிந்து கொண்டிருந்த உடலை பேட்டை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பழைய பேட்டையில் வசித்துவரும் மாரியம்மாள் (வயது 30), மேரி (வயது 38) ஆகிய இருவரும் தங்களது பாட்டி சுப்பம்மாள்ளை (வயது 90) ஆட்டோரிக்ஷாவில் அருகில் உள்ள காலி நிலத்துக்கு கூட்டி சென்று உயிருடன் எரித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பம்மாள் பாட்டி அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாகவும் அதில் எரிச்சல் அடைந்த மாரியம்மாள் பாட்டியை ஒரு பராமரிப்பு மையத்தில் மூன்று முறை சேர்த்தாகவும், ஆனால் சுப்பம்மாள் பாட்டி வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது எனவே பேத்தி மாரியம்மாள் மற்றும் மேரி இருவரும் சேர்ந்து இந்த கொடூர செய்யலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *