கடன் வாங்கிய பணத்தைத் திருப்பித் தர மறுத்ததால் வாங்கியவரை குத்திக் கொன்ற வாலிபர் கைது.

Crime Scene Do Not Cross

நவி மும்பை, தூர்பே எம்.ஐ.டி.சி.சிர்வானே பகுதியை சேர்ந்தவர் நந்த்கிஷோர் (வயது 45).பிரின்டிங் பிரஸ் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.அவரிடம் ஜெய்சங்கர் (வயது 21) என்பவர் வேலை பார்த்து வந்தார் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நந்த்கிஷோர் அவசரத் தேவைக்காக ஜெய்சங்கர் இடம் இருந்து ரூ.30ஆயிரம் கடனாகப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் கடனாக கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் நந்த்கிஷோரிடம் பணம் இல்லாததால் அவருடனான பேச்சை தவிர்க்கத் தொடங்கினார். இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி நந்த்கிஷோரின் விட்டிற்கு சென்றார். அவர் விட்டில் இல்லாததால் கடனாக கொடுத்த பணம் விவகாரம் பற்றி விட்டில் தெரிவித்தார்.

மேலும் பணத்தை திரும்பி தராவிட்டால் நந்த்கிஷோரை கொன்று விடுவதாக குடும்பத்தினரிடம் மிரட்டல் விடுத்து சென்றார். விட்டிற்க்கு வந்த நந்த்கிஷோரிடம் குடும்பத்தினர் மிரட்டல் குறித்து தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மிரட்டல் விடுத்த ஜெய்சங்கரின் இருப்பிடத்திற்குச் சென்றார்.அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் அங்கிருந்த ஸ்குரூடிரைவரால் சரமாரியாக குத்தினார். இதனால் காயமடைந்த நந்த்கிஷோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். கொலை செய்த ஜெய்சங்கர் சொந்த ஊரான பீகாருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு தயாரானார். தகவலறிந்த போலீசார் ராவாலே பீம் நகர் பகுதிக்கு சென்று அவரைப் பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *