அண்ணியை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய கொழுந்தன் கைது

titwala mak killed brother wife

மும்பை தானே மாவட்டம் டிட்டுவாலா பகுதி உம் பாராணி கிராமத்தை சேர்ந்தவர் துருபாடா வாகே. இவரது கணவர் உயிரிழந்ததால் தனியாக வசித்து வந்தார், கடந்த 6-ந் தேதி அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த கொழுந்தனார் சுரேஷ் என்பவர் போலீசுக்கு தகவல் அளித்தார். இந்தப் புகாரின் படி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷுக்கும் உயிரிழந்த துரூபாடா வாகேவிற்க்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக தெரியவந்தது. மேலும் துருபாட வகேவை கொலை செய்து உடலை தூக்கில் போட்டதாக சுரேஷ் மீது கிராம மக்கள் குற்றம் சாட்டினார். இதன்பேரில் போலீசார் சுரேஷ்சை பிடித்து நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version