கலினாவில் மது தயாரித்து விற்ற 3 பெண்கள் கைது

alcohol one

மும்பை சாந்தாகுருஸ் கலினா பகுதியில் மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பெரில் வக்கோலா போலிசார் கலினா கோலவேரி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 3 பெண்கள் மது பானம் தயாரித்து விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் ருப்மணி பாய் கதம், சானாபாய் தாபேடே, மற்றும் கலாவதி கோட்கே ஆகியோர் என்பது தெரியவந்தது.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version