முப்பெரும் விழா – மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது

WhatsApp Image 2021 12 13 at 18.10.05

மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 12-12-2021 ம் தேதி மும்பை சொம்பூர் வெஸ்ட், திலக் நகர் போலிஷ் ஸ்டேஷன் அருகில், ர‌ஜினி பால்வாடி எதிரில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மன்டலில் வைத்து அன்று காலை 11:30 மணியளவில் சூப்பர் ஸ்டார் ர‌ஜினிகாந்த் அவர்களின் ஆயுள் நீடித்து ‘கலை சேவை ‘சமூக சேவை புரிந்திட இறைவனுக்கு சிறப்பு பூஜை பிரார்த்தனை செய்து வழிபட்டது.

மதியம் 01.00 மணியளவில் 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு விருந்து பரிமாறப்பட்டது, அதை தொடர்ந்து மாநில தலைமை அலுவலகத்தில் வைத்து சூப்பர் ஸ்டார் ர‌ஜினிகாந்த் அவர்களின் 72- பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிக் அனைவருக்கும் இனிப்புகள் குளிர்பானங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் முக்கிய நிகழ்வாக சயான் கோலிவாடாவை சேர்ந்த சரோஜா ராமசாமி அறுவை சிகிச்சை மருத்துவ செலவுக்கு ₹10,000/- கோவண்டி அஞ்சலை சுந்தர் ரா‌ஜ், செம்பூர் அன்பழகி கைம்பெண்களுக்கு ₹20,000/- மொத்தம் ₹ முப்பதாயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இன்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் டாக்டர் தளபதி எஸ் கே ஆதிமூலம் தலைமை தாங்க மாநில மகளிர் அணி தலைவி தலைமை ஆசிரியை திருமதி லதா மணிமாறன், மாநில இணை செயலாளர் எம்.மரியசிலுவை, மாநில நிர்வாகிகள் டி தண்டாயுதபாணி, ஜம்புசண்முகம், *ரஜினி மணிகண்டன் எம் குமார், எஸ்.இசக்கிமுத்து, இளங்கோ, திருமதி மேபல் போல்ட்ரன், மேனகா ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version